இரவானதும் தனியே-6



உன் வரவுக்காய்
காத்திருந்த வேளை
வருத்தப்படுகிறேன்,

தாழ் நீக்கியதும்
தாவியணைப்பாய்
தரிக்கட்டையாய் தவிப்பேன்
என்றிருந்தேன்,

தாவி துலாவும் உன்கண்கள்
என்னை தவிர்த்து
யாரை
தேடுது
உள்ளே?

நீயும் திருடனாய்
அடிமேல் அடி வைக்கிறாய்
வலிக்காது?
ஒழிந்து கொண்டது
யார்?

இதற்க்குத்தான்
அறிவிப்பில்லாது
வந்தாயோ?

செருப்பில் தொடங்கி
அடுப்புவரை
ஆராய்ந்தாய்
யாரும்
தென்படாது போகவே
புன்னைக்கிறாய்,

எதை சோதிக்கிறாய்
எனையா?
பொருளை மட்டும்
காத்திருப்பேன்
என்றிருந்தாயோ?

உன்னிடம் வந்தாரய
ஒப்புக்கொள்வாயா?
ஒப்புக்கேனும் ,

இனி அணைத்தென்ன
ஆரத்தழுவியென்ன
தேடி நீயே
தூண்டிவிட்டாய்,

எரியும் தீயில்
முன் என்ன பின் என்ன
சுட்டது நீ
இனி எரிவதும்
நீ,,,

No comments:

Post a Comment