வெளிச்சம்போட்டு காட்டும்



மறைத்துக்கொள்
மறைந்தும் கொள்
அடைத்துக்கொள்
அடைபட்டும்கொள்
காற்றை தடுப்பாய்
காதலை எப்படி?

எதை ஊற்றி அழிக்கபோகிறாய்?
எதை ஊற்றினாலும்
வளர்க்கப்போகிறாய்
மேலும் பலமாய்,

கடிந்த வார்த்தை
சொல்லும்
முயற்சியில்
கண் காட்டும்
கருணை ?
காணும்போதே,

எடுத்தெரிய இதென்ன
நீ சூட்டிய பிச்சு பூவாய்
நினைத்தாயோ ?

எதன் பின்னே
ஒளிந்துகொண்டாலும்
இதயத்தின்
உள்ளே கசியும்
எண்ணம்
எதில்
சேமிப்பாய்,

வேர்வைத்துளியாகவேணும்
துளிர்க்கும்
துடைத்து கொள்
முதலில்../

No comments:

Post a Comment