தூரம் தொலைந்து போகட்டும்
காற்றலைகளில் நம்
உரையாடல்கள்
மிதந்து செல்ல
மீதம் இருக்கும் காலமும்
இதன் ஊடேதான்
நம் கூடலும் கூடுமோ/
பயம் கொல்கிறது
எண்களில் முகம் பதிந்து
எண்ணே முகமாகிபோனது
அரிதாக சில வேளை
கனவிலும் எண்
இனி நாம் கூட எண் தான்
பிறக்குமோ?
நான் கூட சில நேரம்
திகைக்கிறேன்
அதிலும் ?
No comments:
Post a Comment