வசமாகி போனதால் வாசம்



அதை கடக்கும் போதெல்லாம்
புழையும், சீழ் வடியும்
புண்ணின்
வாசமே,
எதோ இறந்திருக்கிறதா?
இல்லை,

இறக்க இருக்கிறதா?
அதுவும்
இல்லை
செய்யப்போகும்
தவற்றின் வீச்சம்
முன்னே
வீசிடும்,

முரண்டுடன்
தவறை
செய்துவிட்டால்
வாசம் மறைந்து
விடும்,

உடலில் கலந்தபின்
ஒரே வாசமாகி
அதன் வசமாகி
அழுக்கும்
அசிங்கமும்
நாசியில்
தங்கிவிடும்,
வெளிவரமல்,

No comments:

Post a Comment