இடம் கொடுக்காதே இருந்தால் கெடும்



சாத்திய கதவுக்குள்
சங்கதிகள் பல
பூட்டிய மனதிற்கு
புகுந்தாடும்
சுகம்
யார் உணர்வர்,

நேற்றை கனவில்
ஒரு பிரதி எடுத்து
பாதி பாதியா
பகிர்ந்துக்கொள்ள
கனவுக்கு
திடம் இல்லை

தொட திறனின்றி
ஊதி வளர்க்கும்
நெருப்பு,
தொட
மறுப்பதால்
வளர்ப்பை
மறுக்க வில்லை.,

ஒரு விதையிலும்
என்ன முடியா
விதை இருப்பு
ஒவ்வொரு
மனதிலும் சில
சொல்ல முடியா
கதை இருப்பு,

புதைந்து,
எரிந்து போன
எத்தனையோ
தோண்ட முடியா
மனப்புதையல்
உன் புதையலை
எரிப்பதா?
புதைப்பதா?

தூத்தி
விடு காற்றில்
யார் கண்ணிலும்
தூசாக வேணும்
உருத்தட்டும்,,,?

Comments

Popular Posts