யார் கத்தி என்ன/



குத்தப்படும் கத்தியில் கூட உள்ளது
ஒரு பிடி,

கற்றோர் என கர்வப்படும் நமக்கு இல்லை
அப் பிடி

தீராதிருக்க கூர்மை தீட்டணும் கத்திக்கு

தீரா பகமை தீர்க்க தீட்டப்படும் புத்திக்கு,

யார் குத்தினாலும் குத்தும் கத்தி

யாரை குத்துவதென்று சொல்லும் புத்தி

குத்துவது குத்தமென அறியா கத்தி

குத்தமென தெரிந்தே குத்தும் புத்தி

கத்தி உறையில் அமைதியாகும்

புத்தி யாரோ ஒருவனின் உரைக்கு அடிமையாகும்

No comments:

Post a Comment