முகத்தில் விழும் முடிகற்றையை ஒரு விரல்
கொண்டே ஒதுக்கும் லாவகமாகட்டும்,
நிற்காது வழுக்கும் போதல்லாம்
முனை பிடித்து முதுகு வரை இட்டு செல்லும்
ஆடை திறுத்தலாகட்டும்,
எதிர் பேசும் எவராயினும் கண்ணில்
ஊடுருவி காதுமடல் சிவக்க செய்வதிலாகட்டும்,
வார்த்தை படகாய் அர்த்தம் கடலாய்
அதீத நம்பிக்கையாய் பேசுவதில்லாகட்டும்,
அச்சு அசலாய் உன்னின் மரு உருவாய்
ஒருத்தியையும் காணேன்?
No comments:
Post a Comment