என் குளம்
--------------
தவளை தாவல் கொள்ளும்
அழகான குளம்தானது,
மீனுடன் சேர்ந்தே நீந்தும் பாசிபூவும்
அழுக்கை நீக்கும் நீருடன்
சேர்ந்தே மீனும் நீந்தும்
தூண்டில் மாட்டியதும்? 

கொதிக்கும் சட்டியில்
மீந்தும் மீனை
கண்டதும் எதன் அழுக்கை நீக்க
வந்ததோ? என தோன்ற
சுவையில் சுட்டது வாய்,
உண்மை எப்போதும்
கருவாடாய் காய்கிறது
அழுக்கை அதன் உருமாற்றி
சாறாய் குடித்தபோதும்
அழுக்காய் சிக்கும்
முள் குரல்வளையில்;

No comments:

Post a Comment