பாச்சை


கோணல் வகிடு,
கும்மிருட்டின் நிலா ஒளி,
சுருக்கிய நெற்றி,
நிமிடத்திர்கொருதரம்
யாரும் அறியாதருணத்தில்
விழியால் தீண்டல்,

வியக்கும் வார்த்தைகளுக்கும்
விழி விரியாமை?
பதிலலிக்கும் முன்னமே
கேள்விக்கான வழிவிடல்.

திணராத் தமிழ்
திக்கி திரியும் என் வார்த்தைகளுக்கு
சப்தமில்லா சிரிப்பு.

பேச்சின் ஊடே சிலவேளை
மூன்றாம் பாலின் வசியம்
முடி ஒதுக்கல், புடவை திருகல் என
நாட்டிய பாவனை ஏதும் செய்யாதிருத்தல்.

கதை ஒன்று சொன்னால்
அழகானதொரு தலைப்பிடல்
இவையல்லாமல்
இடைச்சொருகளாய்
ஏகாந்தமான ஏக்கபெருமூச்சு.,

வடித்த சோற்றுக் கஞ்சியின்
ஆடையாய் உள்ளாடல்
அரிய செய்தல்
கோபத்தில் ,

இவைமட்டுமா உன்
அடையாளம் இருக்கே
இன்னும் ஏராளம்,

No comments:

Post a Comment