ஏன் பெண் ஆனாய்?



பிறந்தது பெண் 
முதல் செய்தி முகச்சுழிப்புடன்
ஆரம்பிக்க பட்ட
வாழ் நாள் பயணம்

சுழிப்புடனே பின்னே
பள்ளி,கல்லூரி பழிப்பு
இளிப்பு, பரிவு
காதல், பகிர்வு,
பாசங்கு, வெறுப்பு
பிரிவு எல்லாம்

நீரில் நீந்த நீரை தள்ளுவதாய்
தள்ளித்தள்ளி
வேலை கரை தேடி
ஏறி அலுவலகம்

நிர்வாகி,பணியால்
என பலரும் வீசும்
பார்வை பருவத்தின்
மேல் மட்டுமே

மேல்(ஆண்)
தன்னை மேலாக
ஆதிக்க சகதியில்
பழகி,

இடை பயணத்தில்
இடி,உராய்வு, உரசல்
கழுசடை சீண்டல்
கண்டிப்பாதாய்
தாய்,தங்கை இல்லையா?
எனத்தொடுக்கும்
வார்தைக்கு
அனாதை யாம்,
துடுக்கு பதில்

வேதனை தீர
வேண்டுவாய்துணை
என துணை இனையாகி
துணித்துவைபிலிருந்து
தூக்கும் சுமை இரண்டாகி

இரண்டும் இருட்டில்
இருந்து கலந்து
கரு உருவாகி
அதற்க்கும் சேர்த்து
ஒரு கை உணவாக்கி
ஒருவாகாய்
கழிந்து களைப்பை
தீர்க்க இருக்க
நினைக்க

இவள் ருதுவாகி
இவளும் பெண்ணாகி
என் பாதை போல்
இவள் கடக்க
ஆயத்தமாகி விட்டாள்,

மூழ்குவது, கரை
தொடுவதும்
அவள் காலம் வரை
இரக்கி இருப்பேனோ?

No comments:

Post a Comment