===========
எல்லோரும் புத்தனாக
ஆசைப்படுகிறோம்,
ஆயுதமாக ஏந்தியே
அஹிம்சை செய்கிறோம்
கண்ணம் காட்டாமல்
சிலுவையை
வேண்டுகிறோம்
,பாட்டெழுத பாரதி
மீசை மட்டும்
வளர்க்கிறோம்
நீயூட்டன் விதி எதிர்க்க
மேலே பறக்கிறோம்
என்றேனும் நாம்
முள் கிரிடமான
மனமுரண்டை மாற்ற நினைத்ததுண்டா?
No comments:
Post a Comment