அடுக்கடுக்காக அடுக்கி
காலம் வாரியாக வகுத்து
ஏடுகளை ஒவ்வொன்றாக
புரட்டிப்பார்க்க
தொலைத்தவைகளின்
கணக்கோ ஈவு இரக்கமின்றி
அதிகம்
?
?
மீட்டல் இனி இயலாது
மறுபடியும் வரிசைமாற்றிப்பார்த்தாலும்
பால்யத்தில் கண்டது
கேட்டது என
சிராய்ப்பின்
எரிச்சலாய் ஆங்காங்கே ரத்த
கசிவுகளாய்
வலிகள் மரத்து போய்
ரணம் பட்ட அடையாளம்
மட்டும் மிச்சம் மீதியாய்
எதனை எடுத்து எதில் கூட்டியோ
வகுத்தோ கழித்தோ பார்த்தாலும்
அதே பதில்தான்
எல்லாம் எதற்க்காக
?
?
சடுதியில் மாரிப்போனதாய்
நினைப்பு எத்துனை மணித்துளிகள்
நழுவியது எதில் மூழ்கியிருந்தேன்
ஏன் யாரும் என்னை உசுப்பவில்லை
நண்பர்கள் யாரும் எனக்கு
உதவியதில்லை ஏன்
?
?
எதில் அவர்கள் வைத்துள்ளார்கள்
என்னை
அதாரம்,தாரம், பொருளாதாரம்
என இவைக்களின் தோள்கலில் நானோ?
இவைகளோ?
மாரி மாரி பயணம்
யாரோ அவள் கொஞ்ச நாள்
அவளுடனும் பயணம்
பிரிவுகளில் சில நாள் ஏக்கம்
வசவுகள், வாழ்த்துகள்
வந்து போன நாளும் உளது
மீதம் இருக்கும் காலம்
யார்மீதோ
? என்மீது யாரோ?
? என்மீது யாரோ?
கழியப்போகிறது
மீண்டும் அடுக்குகளை
கலைத்துப்போட்டேன்
இடையில் வெளிச்சம் பட்ட
ஒரு சிறு கூட்டின் ஒளிக்கீற்றை
இது என் கையில் மட்டும்
பிடிபட மறுத்த மீதமிருக்கும்
பாக்கி, மரண விழல்
மரணவெளி வெளிச்சமாக
இருக்கக்கூடும்.
No comments:
Post a Comment