இவர்கள்
கனவில் வண்ணம் பூச
நிஜத்தை குழைத்து கொண்டிருக்கிறார்கள்?
விடுபட்ட விலங்கை மறக்கவேண்டி
இங்குதான் பூட்டப்பட்டிருந்தாக ,
நினைவுபடுத்துகிறார்கள்?
தொலைந்து போய் விட்டதை தேடி
தொலைந்து போகிறார்கள்.
வசிகரிக்கவே பூசியதை ,மழை நாளில்
காண்பிக்க கலைந்து போகிறார்கள்.,
பிச்சை போட கையேந்திக்கொண்டும்
கையேந்துவோனிடம் பிடுங்கி கொண்டும்
சூடவேண்டிய மலர்களை நாரிலிருந்து
உதிர்த்தெடுக்கிறார்கள்
தூசு கசக்கி, கண்களில் தட்டி கொண்டிருக்கிறார்கள்,
இவர்களில் இவர்கள் யாரென்றே இவர்கள்
அறியவில்லை?
இவர்கள்
கல் லாதவரை?
No comments:
Post a Comment