அது ஏன் ?
காத்திருக்க செய்கிறது
இருட்டு வரக்காத்திருக்கும்
கள்வர் குணமா?
அது ஏன்?
சோகமாய் படுகிறது
பால்,
மடியில் கட்டியதும் வரும்
வலிபோல்
கனக்கிறது.
அது ஏன் ?
முன் எப்போதுமில்லா
மனம்,
குதிக்கிறது
புதிதாய் விதைத்த
பயிர்,
முளை விடுதல் போல்
வந்தும் வாராததுமாய்/
அது ஏன்?
நம்பிக்கை வருகிறது
தாயும்,இறப்பும்
உண்மை.
அப்பனும் , ஆண்டவனும்
நம்பிக்கை.
என்பது போல்
நம்பிக்கையிலா?
அது ஏன் ?
முகம் காட்ட
மறுக்கிறது,
கருகிவிடும் காயம்
ஆகிவிடும்,
என்பதாலா? புதிதா
பள்ளிக்கு
செல்ல மறுக்கும்
குழந்தைபோல்
மறைந்துக்கொண்டு,
அடமாய்?
No comments:
Post a Comment