இருட்டில் நடந்து நடந்து
ஆற்றில் வீழ்ந்து
காணமல் போக
இருந்தேன்
அந்த மின்னல் மட்டும்
வராதிருந்தால்
என் ஆசை மண்
மூடி போயிருக்கும்
கண்மூடிதனமா போன
என்னை மின்னல்
ஓளி மின்னி
காப்பாற்றியது
கரை கண்டேன்
அந்த மின்னல்
முகம் காட்டி
வழிக்காட்டியது
வழுக்காது பாதை
கடப்பேன்
இனி வருங்காலத்தில்
மின்னல் ஒளி உள்வாங்கி
பின்னுவேன் பல கதைகள்
மின்னுவேன் /
ஊசிதான் அதன் ஒளி
ஆனால் வலிக்காது
போடும் வகை திறன்
வாய்ந்த கை
அதன் கையிருப்பு
பெரும் படிப்பு
என்ன இருந்தாலும்
என் இனமல்லவா
அது,
நான் இடி
சப்தம் மட்டுமே
பேரிரைச்சளாய்,
மின்னல் அவ்வாறல்ல
தூர தெரிந்தாலும்
பூமி துளைப்பதுபோல்
வீச்சு அதன் ஒளி
வீச்சு
தூர மழை வாசணை
மன்(ண்)(னி)பாயாக நீ சூடிய
பூ விசியதால்
மண் வாசனை வீசுதோ
சூரணமாய்.
No comments:
Post a Comment