யோசிக்கிறேனா/




எண்ண ஓட்டத்திற்க்கு ஈடு கொடுக்க
முடியாமல் எழுத்துக்கள் பின்னி
பிழையாகிறது

திருத்தி பின்ன இடைவெளி விஞ்சி
விரும்பம் தளர்கிறது

எத்தனை முறை சலித்தாலும்
சாப்பிடும்போது கடைவாய் பல்லில்
அகப்படும் கல்லாய்
சலிப்பு, சங்கடம்/

முழுதும் கல்லாக இல்லையே
என ஒரு மனத்தேற்றல்
கொள்ளாமலில்லை

எப்போதும் ஒரு கல் இட்டு
சமைப்பதில்லைதான்
சமயத்தில்?

பிறவி எழுத்தன் இல்லைதான்
பிற எழுதாளன் போல் ஆக
முடியா விட்டாலும்

பிறகு ,ஒரு நாள் ஆகிவிட்டாள்
பாவம் நான் மட்டும்
இல்லையே?

No comments:

Post a Comment