ஏமன் நாட்டு மஜ்னுவும்
அராபிய தேச லைலாவும்
காதலித்த சமயத்தில்;
லைலா வசிக்கும்
நகரத்தில்
மஜ்னு நுழைந்த
உடன் அந்த மண்ணையும்
மரச்செடி கொடிகளை
முத்தமிடுவானாம்.,?
படித்த எனக்கோ
பைத்தியக்காரத்தனம்
என தோன்றியது
உன்னிடம் பழகுவதற்க்கு
முன்பு,
அந்த நோய் என்னை பீடித்த
பின்பு,
உன் வீட்டின் வாசற்கதவில்
என் கைரேகையை
விட
இதழ் ரேகை அதிகமடி
பெண்ணே.,?
No comments:
Post a Comment