நான் அப்போதே செத்திருக்கணும்?
ஏன் என்னையே துரத்துகிறாய்
என்றாயே,

நான் அப்போதே செத்திருக்கணும் ?
ஆசையா கொடுத்த காக்கா கடி
கல்லமிட்டாய்
வாங்க மறுத்தாயே,

நான் அப்போதே செத்திருக்கணும்?
நீ முதல் வகுப்பு தேர்ச்சியின்
சந்தோஷத்தில் முத்தமிட
ச்சி சீ என்றாயே,

நான் அப்போதே செத்திருக்கணும்?
எனக்கா நீ காந்திருப்பதை
மறைந்து நின்று பார்திருந்தேன்
என சொன்னபோது
விருட்டென பதில்
ஏதும் சொல்லாமல்
சென்றாயே,

இப்படியாக சாக நினைத்து
நினைத்து சாகா வரமாய்
நீ எனக்கு தந்து கொண்டே
இருக்கிறாய்?

No comments:

Post a Comment