வேங்கியாரியாப்பா?




தொலைபேசி பிடுங்கி சொன்ன
செய்திகளில்

நீ வரும்போது ..

எனக்கு,
கப்ப ஒண்ணும் கடலு ஒண்ணும்,
எனக்கு,
ரயிலு ஒண்ணும்,ரயிலு டேசன் ஒண்ணும்,
வாங்கியாரியாப்பா?

இப்படி
வச்சி வச்சி வளஞ்சி ருக்குமேபச்சையா
மூக்கு மாரிதி
பச்சைக்கிலராருக்குமே
வச்சா போமேஅந்த மாரிதிப்பா.

அவன் செய்கை எனக்கு விளங்குவதாய்
விளக்குகிறான் விளங்கவில்லை
விளங்குவதாய்
ஒப்புக்கு, சிறு மனம் ஒடியக்கூடாதென
ஒப்பு
கொள்கிறேன்

எதை கொடுத்து அவன்
கனவை
பூர்த்தி செய்யப்போகிறேன்?

அவன்,
கனவில் துள்ளித்திரிவான்
நானோ,
கவலையில்
சொல்லி சொல்லிதிரிகிறேன்.

No comments:

Post a Comment