இதோ
போர்த்திக்கொண்டிருக்கும்
தோலில் தெரியவில்லை
அது தரும் பாலின்
வெண்மையை,
இதோ.,
தொடர்ந்துகொண்டிருக்கும்
நிழலில் தெரிவதில்லை
அது பெறும்
நிஜத்தின்உண்மையை,,,,
இதோ.,
எச்சமாய் விழும்போது
விதைக்கு தெரிவதில்லை
எத்தனைவிருட்சகங்களை
வேர் விடபோகிறது
என்றஉண்மை,,,,,,
இதோ.,
கட்டிக்கொண்டிருக்கும்
கைகளில் தெரிவதில்லை
அணைத்தது
எத்தனைபெண்மை
என்றஉண்மை,,,,
இதோ..
வீசி கொண்டிருக்கும்
காற்றில் தெரிவதில்லை
அது உதிர்த்துவந்த
பூக்களின்
எண்ணிக்கையை
இதோ.,
காத்துகொண்டிருக்கும்
எனக்கு தெரியவில்லை
நாட்களை எப்படி?
கடத்துவதென்ற
உண்மையை,
எப்படி புரிய வைப்பது
நட்சத்திரங்களை எண்ணியே
நாள் கடத்துகிறேன்
என்ற
உண்மையை.,,?
nice
ReplyDelete