கோபமா இருக்கிறாயோ?
ம்ண் நீ களி மண் நீ
மண்ணின் தன்மை கொண்ட
பெண் நீ
குழைத்தால் பாண்டமாகும்
குணம் கொண்ட
மண் நீ.,
மன்னித்து விடு
இல்லை
மண்ணில் நிற்கவிடு?
ஏணிப்படி ஏற்றிவிட்டு
எங்கே போனாய்?
நீ .,
பிடித்திருக்கிறாய் என்றே
ஏறினேன் பிடிவிட்டால்
அடியில் வீழ்ந்து
அடி விழுமே?
அழுவதுதான்
உனக்கு பிடிக்குமென்றால்
விடு, ஏணியின்
பிடியை விடு,
உன் பிடியில் இருக்க
ஏணி ஏறிவிடப்போகிறது
மேலே மேலே?
திசை காட்ட வந்தாய்
உன் திசை நோக்கி
நிற்கிறாய் !
எத்திசை என் திசை
ஒத்திசை செய்,
ல”கரமும் ன”கரமும் ற”கரமும்
கற்றிசைத்தாய்
பின் ஏன் ?
ந”ரகமாய்
கையசைத்தாய்?
மின்வெட்டில்
என்னை வெட்டி விட
திட்டமா?.
நான் சொல்லிவிட்டால்
மின்வெட்டே இல்லாது
செய்து விடும்
அம்மா?....தெரியுமா?
இதோ பூக்கள் மண்ணில்
சிரிக்கிறது,
புழுவாய் மனம்
மண்ணில் நெளிகிறது
வேரில்? தொடர்பு
அராதினி.,?
No comments:
Post a Comment